பொது நூலகத்துறை இயக்குநர் நியமனம்

சென்னை: தமிழ்நாடு அரசின் பொது நூலகத்துறையின் இயக்குநராக ஐஏஎஸ் அதிகாரி  இளம்பகவத் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசின் பொது நூலகத்துறையின் இயக்குநராக பாடநூல் கழகத்தின் செயலாளர் கண்ணப்பன் நியமிக்கப்பட்டு இருந்தார். அவர், தற்போது விடுமுறையில் சென்றுள்ளதால், மீண்டும் அந்த பொறுப்பை  ஒருங்கிணைந்த கல்விதிட்ட கூடுதல் இயக்குநர் நாகராஜன் முருகன் கவனித்து வந்தார். இந்நிலையில், பொது நூலகத்துறையின் முழு கூடுதல் பொறுப்புக்கு ஐஏஎஸ் அதிகாரியை நியமித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: ஒருங்கிணைந்த மாநில திட்ட இயக்ககத்தில் கூடுதல் திட்ட இயக்குநராக பணியாற்றி வரும் எஸ்.நாகராஜ முருகன், பொறுப்பு வகித்து வந்த பொது நூலகத்துறை இயக்குநர் பொறுப்பை நிர்வாக நலன் கருதி, இல்லம் தேடி கல்வித்திட்ட சிறப்பு அலுவலர் இளம்பகவத்துக்கு வழங்கப்படுகிறது. பொது நூலகத்துறையின் முழு கூடுதல் பொறுப்பை இனி ஐஏஎஸ் அதிகாரி இளம்பகவத் கவனிப்பார்.

Related Stories: