சென்னை: தமிழக மீனவர்களின் படகுகள் ஏலம் விடப்படும் என்ற இலங்கை அரசின் அறிவிப்பை தடுக்க ஒன்றிய அரசு அழுத்தம் தர வேண்டும் என கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பாமக தலைவர் ராமதாஸ்: தமிழ்நாட்டு மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட நாட்டுப்படகு, விசைப்படகு உள்ளிட்ட 105 படகுகள் வரும் பிப்.5ம் தேதி முதல் ஏலத்தில் விடப்படவிருப்பதாக இலங்கை அரசு அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது. அதன்படி இலங்கை சிறைகளில் இப்போது வாடும் 56 மீனவர்களையும், அனைத்து படகுகளையும் விடுவிக்கும்படி இலங்கைக்கு ஒன்றிய அரசு அழுத்தம் தர வேண்டும்.