மீனவர்களின் படகு ஏலம் இலங்கைக்கு ஒன்றிய அரசு அழுத்தம் தர வேண்டும்: தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னை: தமிழக மீனவர்களின் படகுகள் ஏலம் விடப்படும் என்ற இலங்கை அரசின் அறிவிப்பை தடுக்க ஒன்றிய அரசு அழுத்தம் தர வேண்டும் என கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பாமக தலைவர் ராமதாஸ்: தமிழ்நாட்டு மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட நாட்டுப்படகு, விசைப்படகு உள்ளிட்ட 105 படகுகள் வரும் பிப்.5ம் தேதி முதல் ஏலத்தில் விடப்படவிருப்பதாக இலங்கை அரசு அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது. அதன்படி இலங்கை சிறைகளில் இப்போது வாடும் 56 மீனவர்களையும், அனைத்து படகுகளையும் விடுவிக்கும்படி இலங்கைக்கு ஒன்றிய அரசு அழுத்தம் தர வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்: இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் மீனவர்கள் விடுதலை அடையும் போது அல்லது அவர்கள் விடுவிக்கப்படும் போது, அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும், உடைமைகளையும் திருப்பி வழங்க இலங்கை கடற்படை முன்னதாக ஒப்புக் கொண்டதற்கு மாறாக இலங்கை அரசு நடந்து கொள்வது, மீனவர்கள் வாழ்வாதார உரிமைக்கு எதிரானது என்பதை இலங்கை அரசுக்கு எடுத்துக் கூறி, தமிழ்நாட்டு மீனவர்கள் படகுகள் ஏலம் விடப்படுவதை தடுக்க வேண்டும் என ஒன்றிய அரசையும், வெளியுறவுத்துறை அமைச்சரையும் கேட்டுக் கொள்கிறது.

Related Stories: