சென்னை: இந்திய ஆட்சி பணி விதி 6ல் திருத்தம் செய்யும் முடிவை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்றும் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மாநில அரசுகளுடன் உறவில் விரிசல் நிகழ வைக்கும் முயற்சியை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் எனவும் கமல்ஹாசன் கேட்டுக் கொண்டுள்ளார். மேற்குவங்கம், ராஜஸ்தான் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தமிழகம் தனது எதிர்ப்பை வலுவாக பதிவு செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.