பனாஜி: கோவாவில் பாஜ ஆட்சியில் உள்ளது. இம்மாநிலத்தின் 3 முறை முதல்வராக இருந்தவரும், பாஜ.வின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் விளங்கிய மனோகர் பாரிக்கர் கடந்த 2019ம் ஆண்டு இறந்தார். அவருக்கு பிறகு இம்மாநில முதல்வராக பிரமோத் சாவந்த் பொறுப்பு ஏற்றார். 40 உறுப்பினர்களை கொண்ட கோவா சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 14ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் 34 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜ நேற்று முன்தினம் வெளியிட்டது. அதில், மனோகர் பாரிக்கரின் மகன் உத்பால் பாரிக்கரின் பெயர் இடம் பெறவில்லை. இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு 2019ல் நடந்த பனாஜி தொகுதி இடைதேர்தலில் உத்பால் சீட் கேட்டார்.