சென்னை: கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஜனவரி 1ம் தேதி முதல் அகவிலைப்படி உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது: கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களின் அகவிலைப்படி உயர்விலை 1-1-2020 முதல் 30-6-2021 வரை நிறுத்தி வைக்க அறிவுரைகள் வழங்கப்பட்டன. தற்போது தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு 1-1-2022 முதல் அகவிலைப்படியினை உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளது.