சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் 6 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது. மொத்தம் 57 இடங்களில் லஞ்சஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தருமபுரி, சேலம், சென்னை உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. வருமானத்திற்கு அதிகமாக ரூ.11.32 கோடி சொத்துகுவிப்பு செய்யப்பட்டிருப்பது சோதனையில் தெரியவந்திருக்கிறது.