சேலம் மாவட்டம் கோட்டையூரையும் தருமபுரி மாவட்டம் ஒட்டனூரையும் இணைக்க ரூ.250 கோடியில் சாலை அமைக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: சேலம் மாவட்டம் கோட்டையூரையும் தருமபுரி மாவட்டம் ஒட்டனூரையும் இணைக்க ரூ.250 கோடியில் சாலை அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து உரையாற்றிய முதல்வர், தருமபுரியில் புதிதாக பால் பதனிடும் நிலையம், சிப்காட் பூங்கா ஏற்படுத்தப்படும் என்று அறிவித்தார். ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற நான் காட்டிய முனைப்பு மக்களுக்கு தெரியும் என்றும் ரூ.4,600 கோடியில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் 2வது கட்டத்திற்கு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Related Stories: