சென்னை: நடிகர் சூர்யா நடிக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் காரைக்குடியில் நடந்தது. அப்போது, படப்பிடிப்புக்கு தேவையான டம்மி துப்பாக்கிகளை உதவி இயக்குனர் விக்டர் என்பவர் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு கொண்டு சென்றார். அந்த நேரத்தில் அங்கு வந்த போலீசார், அவரிடம் இருந்த டம்மி துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். அதன் தொடர்ச்சியாக சென்னையில் உள்ள கிடங்கிலிருந்து 150 டம்மி துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, தென்னிந்திய திரைப்பட டம்மி எபக்ட்ஸ் சங்கம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.