தேனி: வேட்புமனு தாக்கலில் விபரங்களை மறைத்த வழக்கில் ஓபிஎஸ்சிடம் விரைவில் விசாரணை நடைபெற உள்ளது. இதுதொடர்பாக தொடர்பாக போலீசார் எஸ்பி அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் எம்எல்ஏ மற்றும் அவரது மகன் தேனி எம்பி ரவீந்திரநாத் ஆகியோர் தேர்தலின்போது வேட்புமனுத்தாக்கலில் விவரங்களை மறைத்த புகாரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் இருவர் மீதும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 125-ஏயின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் புகார்தாரரான மிலானியிடம் எஸ்பி பிரவீன் உமேஷ் டோங்கரே, மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி சுந்தர்ராஜ், இன்ஸ்பெக்டர் அரங்கநாயகி ஆகியோர் கடந்த வாரம் விசாரித்தனர்.