சென்னை: தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட ஜனவரி 9, 16 ஆகிய நாட்களில் விதிகளை மீறியதாக ரூ.78,34,900 அபராதம் வசூலிக்கப்பட்டது. ஜனவரி 9ல் ஊரடங்கு விதிகளை மீறியதாக 19,962 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக டி.ஜி.பி. தெரிவித்திருக்கிறார். இதேபோல் ஜனவரி 16ல் ஊரடங்கு விதிகளை மீறியதாக 14,951 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 2 முழு ஊரடங்கு நாட்களிலும் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறலாம் காவலர்கள் சிறப்பாக பணியாற்றியுள்ளனர் என்றும் டி.ஜி.பி. தெரிவித்துள்ளார்.