சென்னை: கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்படுவதை எதிர்த்து தொடர்ந்த வழக்கை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் பொது இடங்களுக்கு வர கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்குவதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்த நிலையில், ஜனவரி 31- ல் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.