குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டது குறித்து பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டது குறித்து பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். சுதந்திர போராட்ட வீரர்களின் படங்கள் இடம்பெற்ற அலங்கார ஊர்தி குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெற அனுமதி தர வேண்டும் என்று கடிதத்தில் முதல்வர் கோரிக்கை விடுத்திருக்கிறார். தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பது ஏமாற்றம் அளிக்கிறது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார்.

Related Stories: