தாவணகெரே: யாதகிரி, விஜயநகர், விஜயபுரா ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 10 பேர் பெங்களூருவில் தங்கி வேலை செய்து வருகிறார்கள். பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்காக நேற்று முன்தினம் இரவு பெங்களூருவில் இருந்து காரில், ஊருக்கு சென்றனர். அவர்கள் சென்ற கார், தாவணகெரே மாவட்டம், ஜகலூர் தாலுகா, கணகட்டே கிராமத்தில் உள்ள சுங்கச்சாவடி அருகில் நேற்று அதிகாலை வேகமாக சென்று கொண்டிருந் கார் கட்டுப்பாட்டை இழந்த கார், தேசிய நெடுஞ்சாலையில் அமைத்துள்ள சாலை தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதி கவிழ்ந்தது.