சென்னை: குரோம்பேட்டை, அஸ்தினாபுரம் மாருதி நகரை சேர்ந்தவர் குமார் (48). இவர், பொங்கல் பண்டிகை கொண்டாட, மகள் தன்யாஸ்ரீ (14), தம்பி வெங்கடவரதன் (45) ஆகியோருடன் சொந்த ஊரான திருச்சி மாவட்டம், குளத்தூருக்கு வாடகை காரில் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டார். காரை கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாக துருவம், பெரிய மாம்பட்டுவை சேர்ந்த விஸ்வநாதன் (27) ஓட்டினார். நேற்று அதிகாலை 4 மணியளவில் பாடாலூர் ஆஞ்சநேயர் கோயில் அருகே கார் சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து முன்னால் தார் ஏற்றி சென்ற டேங்கர் லாரியின் டீசல் டேங்க் மீது மோதியது. இதில் டீசல் டேங்க் வெடித்ததால் கார், சாலையின் சென்டர் மீடியனில் ஏறி நின்றபடி தீப்பிடித்தது.