புதுடெல்லி: உ.பி. சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 125 வேட்பாளர்களின் பட்டியலை முதல் கட்டமாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதில் உன்னாவில் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியின் தாய்க்கு தேர்தல் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. உ.பியில் அடுத்த மாதம் 10ம் தேதி தொடங்கி மார்ச் 7 வரை 7 கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் வேட்பாளர் தேர்வில் மும்முரம் காட்டிவருகின்றன. இதற்கிடையில் காங்கிரஸ் முதற்கட்டமாக 125 வேட்பாளர்களை நேற்று அறிவித்தது. இதில் 50 பெண்கள் இடம் பெற்றுள்ளனர். மேலும் உன்னாவில் பலாத்காரத்துக்கு ஆளான சிறுமியின் தாய்க்கும் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் டிக்கெட் வழங்கியுள்ளது.