48 மணி நேரத்துக்கு தேவையான மருத்துவ ஆக்சிஜனை இருப்பு வைத்துக் கொள்ளுங்கள்: மாநில அரசுகளுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

டெல்லி: போதுமான ஆக்சிஜனை இருப்பு வைத்துக்கொள்ள மாநில அரசுகளுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மாநில சுகாதாரத்துறை செயலாளர்களுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதியுள்ளார். அதில், நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மருத்துவ ஆக்சிஜனை இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும் கருவிகள் செயல்படும் நிலையில் உள்ளதை உறுதி செய்ய வேண்டும் எனவும் கடிதத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

Related Stories: