மனித உரிமை அமைப்புகளை பாஜ அச்சுறுத்துகிறது: திருமாவளவன் கண்டனம்

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளன் வெளியிட்ட அறிக்கை:  மதுரையில் உள்ள மனித உரிமை அமைப்பான மக்கள் கண்காணிப்பகத்தின் மீது வழக்குப்பதிவு செய்து அதன் அலுவலகத்தில் சிபிஐ சோதனையிட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள மனித உரிமை அமைப்புகள் நன்கொடை பெறும் வாய்ப்பை மறுப்பதும் அவர்களின் செயல்பாடுகளை முடக்குவதுமாக மோடி அரசு தொடுத்துள்ள சனாதனத் தாக்குதலை விசிக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். மக்கள் கண்காணிப்பகத்தின் மீது ஏவப்பட்டுள்ள இந்த தாக்குதலை கண்டித்து குரல் எழுப்பஅழைக்கிறோம்.

Related Stories: