பஞ்சாப்: இத்தாலியிலிருந்து அமிர்தசரஸ் வந்த விமானத்தில் பயணித்த 100- க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதியான சம்பவத்தில் பலரின் சோதனை முடிவுகளில் தவறு நிகழ்ந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தனியார் ஆய்வகத்தில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இத்தாலியின் மிலன் நகரில் இருந்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸிற்கு வந்த விமானத்தில் 170 பயணிகள் பயணித்தனர். இவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 125 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக தகவல் வெளியானது.