சந்தன வீரப்பன் அண்ணனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

சேலம்: சேலம் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் சந்தன கடத்தல் வீரப்பனின் அண்ணன் மாதையன் (73), வயது முதிர்வின் காரணமாக அடிக்கடி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில், கடந்த மாதம் 29ம் தேதி, மாதையனுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை முடிந்து 6ம் தேதி, மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று அதிகாலை மாதையனுக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே வார்டன்கள் அவரை, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: