தேனி: தேனி மாவட்டத்தில் வடவீரநாயக்கன்பட்டி, தாமரைக்குளம், கெங்குவார்பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள அரசுக்கு சொந்தமான சுமார் 182 ஏக்கர் நிலத்தை கடந்த அதிமுக ஆட்சி காலத்தின்போது, பெரியகுளம் ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்த அன்னபிரகாஷ் மற்றும் அவரது உறவினர்கள் மற்றும் பலருக்கு அப்போதைய அரசு அதிகாரிகள் முறைகேடாக பட்டா மாறுதல் செய்தனர். இதில் கோட்டாட்சியர்கள், தாசில்தார்கள், துணை தாசில்தார்கள், சர்வேயர்கள், விஏஓ, அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் அன்னபிரகாஷ் உள்ளிட்ட பலர் மீது தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.