காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சரக காவல்துறைக்கு உட்பட்ட காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளின் மனிதவள மேலாளர்களுடன் காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ஆலோசரனை கூட்டம் நடந்தது. டிஐஜி சத்யபிரியா தலைமை தாங்கினார். காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி, எஸ்பிக்கள் காஞ்சிபுரம் சுதாகர், திருவள்ளூர் வருண்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், தொழிற்சாலைகளில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால், காவல்துறையை எந்நேரமும் தொடர்பு கொள்ளலாம். வெளிமாநில தொழிலாளர்களை பணியில் அமர்த்தும்போது, அவர்களது விவரங்கள் அடங்கிய உண்மை தன்மை கோப்புகளை அறிந்து சேர்க்க வேண்டும்.