தாம்பரம்: சென்னை தாம்பரம் அருகே குரோம்பேட்டையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்ஐடி கல்லூரி விடுதியில் தங்கிய 67 மாணவர்களுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பு உறுதியானது. இந்நிலையில், நேற்று விடுதியில் தங்கிய மேலும் 14 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன்மூலம் எம்ஐடியில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 81 ஆக உயர்ந்தது. இவர்கள் அனைவரையும் விடுதியில் தனிமைப்படுத்தி, மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.