குளித்தலை : தமிழகத்தில் தற்பொழுது மீண்டும் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகமாகி வருவதால் தமிழக அரசு முன்னெச்சரிக்கையாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொது மக்கள் பொது இடங்களில் கூடும் பொழுது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். இரவு நேர ஊரடங்குக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.