கவுகாத்தி: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமிற்கு சென்ற ரயில்வே அமைச்சர் அஷ்வின் வைஷ்ணவ், வடகிழக்கு மாநிலங்களுக்கு அதிக ரயில்கள் இயக்கப்படுவது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது என தெரிவித்தார். இது தொடர்பாக வடகிழக்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: வடகிழக்கு மாநிலங்களில் கொட்டி கிடக்கும் இயற்கை அழகை உலகம் முழுவதும் வெளிப்படுத்துவதே ரயில்வே துறையின் முக்கிய பணியாகும். இதற்கான முக்கிய நகரங்களை தேர்ந்தெடுப்பது தொடர்பாக ஆய்வு நடந்து வருகிறது.