ஈரோடு : ஒன்றிய அரசை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறை சார்பில் கோவையில் இருந்து சென்னை வரை நடைபயணம் செல்ல உள்ளதையடுத்து இதற்கான ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நேற்று நடைபெற்றது.கூட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறை தலைவர் மகாத்மா சீனிவாசன் தலைமை தாங்கினார். ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் மனித உரிமை துறை தலைவர் வினோத் மாரியப்பா வரவேற்றார். தமிழ்நாடு மாநில துணைத் தலைவர் அன்பு, வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் ராஜேந்திரன், சிறுபான்மை பிரிவு தலைவர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.