டெல்லி: லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு 5,000 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. மேலும் ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவை முக்கிய குற்றவாளி என சிறப்பு புலனாய்வு குழு தெரிவித்துள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது ஒன்றிய அமைச்சரின் மகன் கார் ஏற்றி கொலை செய்தது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. எதிர்க்கட்சிகளின் கடும் கண்டனத்தை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.