சீர்காழி: பூம்புகாரில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. நாகை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் 1000க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சுமார் 40 விசைப்படகுகள், 150 பைபர் படகுகள் மூலம் சுமார் 800 மீனவர்கள் தினந்தோறும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு பிடிக்கப்படும் மீன்கள் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டம், வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்கு செல்கின்றன.