புதுடெல்லி: மும்பை காங்கிரஸ் பொதுச் செயலாளர் பாரத் சிங், அவரது வழக்கறிஞர்கள் ஆஷிஷ் ராய் மற்றும் அங்கித் உபாத்யாய் மூலம் விலே பார்லே காவல் நிலையத்தில் அளித்த புகாரில், ‘பாலிவுட் நடிகை கங்கனா ராவத், டிவி நேரடி நேர்காணல் நிகழ்ச்சியின் போது இந்திய குடிமக்கள், முன்னாள் சுதந்திர போராட்ட வீரர்கள், முன்னாள் தலைவர்களின் கண்ணியம் மற்றும் மரியாதையை குறைக்கும் வகையிலும், அரசியலமைப்புக்கு எதிரான கருத்தை தெரிவித்தார். கடந்த 2014ம் ஆண்டுக்கு பின்னர்தான் இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்தது என்று தெரிவித்தார்.