சென்னை: சென்னையில் 8வது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு நடந்தது. இதில், தமிழகம் முழுவதிலும் இருக்கக்கூடிய தொழிலதிபர்கள், பொருளாதார நிபுணர்கள் கலந்து கொண்டு உலகத் தமிழர்களுக்கு பொருளாதார உதவிகளை எப்படி செய்வது, உலக தமிழர்களுக்கு நலனுக்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபுபக்கர் பேசினார். பின்னர், அமைச்சர் செஞ்சி மஸ்தான் அளித்த பேட்டியில், ‘‘தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை தடுக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.