உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே பூச்சிபட்டியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார். இவர் தனது குடும்ப நிலத்தை அளவீடு செய்வதற்காக உசிலம்பட்டி நகர குறுவட்ட சர்வேயர் காஞ்சனாவை அணுகினார். அப்போது சர்வேயரின் சகோதரர் செந்தில்குமார் ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ரஞ்சித்குமார், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். அவர்களது ஆலோசனையின்பேரில், நில அளவர் காஞ்சனாவிடம் நேற்று ரூ.4 ஆயிரம் பணத்தை ரஞ்சித்குமார் வழங்கினார்.