உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த காவனூர் புதுச்சேரி கிராமத்தில் தோட்டக்கலை, மலைப்பயிர்கள் துறை மற்றும் சர்வோ சக்தி பெண்கள் கூட்டமைப்பு இணைந்து வீட்டில் மாடி தோட்டம் அமைப்பதற்கு விதை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஊராட்சி மன்றத் தலைவர் சாமுண்டீஸ்வரி ராஜா தலைமை தாங்கினார். தோட்டக்கலைத்துறை உதவி அலுவலர்கள் முனியாண்டி, சதாசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சர்வோ சக்தி பெண்கள் கூட்டமைப்பு நிர்வாகி கலைச்செல்வி வரவேற்றார்.