சென்னை: ஆப்ரிக்கா நாட்டில் இருந்து பட்டை தீட்டப்படாத வைரக்கற்கள் விமானத்தில் சென்னைக்கு கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சென்னை விமானநிலைய சுங்கத்துறையினர் உஷார்படுத்தப்பட்டனர். உடனே வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் மற்றும் சுங்கத்துறையினர் இணைந்து, சர்வதேச விமான பயணிகளை, குறிப்பாக ஆப்ரிக்கா நாடுகளில் இருந்து வரும் பயணிகளை தீவிரமாக கண்காணித்து சோதனையிட்டனர். இந்நிலையில், துபாயில் இருந்து வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான பயணிகளை கண்காணித்தபோது, மும்பையை சேர்ந்த வாலிபர், ஆப்ரிக்க நாடான காங்கோவில் இருந்து துபாய் வழியாக சென்னை வந்தது தெரிந்தது. அவரை தீவிரமாக சோதனையிட்டனர்.