நடிகர் வடிவேலுவின் உடல்நிலை சீராக உள்ளது; விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்.! மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை

சென்னை: நடிகர் வடிவேலு நலமுடன் இருப்பதாக ராமச்சந்திரா மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த 23-ம் தேதி நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா உறுதியான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிரபல நகைச்சுவை நடிகரான வடிவேலு, தன்னுடைய புதிய படத்திற்காக, இயக்குனர் சுராஜ் மற்றும் தயாரிப்பாளர்கள் ஆகியோருடன் லண்டனுக்கு இந்த மாத துவக்கத்தில் சென்றிருந்தார்.

அங்கு 10 நாட்கள் தங்கிய பின்பு, தமிழகம் திரும்பிய அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்ட போது, ஒமைக்ரான தொற்றுக் கூடிய அறிகுறிகள் இருப்பதாக கூறி, அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர், சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஓன்று வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் நடிகர் வடிவேலுவின் உடல்நிலை சீராக உள்ளது; நன்றாக குணமடைந்து வருகிறார், விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: