திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி மாதம் சுவாமி தரிசனம் செய்வதற்காக ஆன்லைனில் ₹300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் இன்று காலை 9 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்டது. ஜனவரி மாதம் டிக்கெட் கோட்டாவின் கீழ், 4 லட்சத்து 60 ஆயிரம் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டன. இந்த டிக்கெட்டுகளை பெறுவதற்காக ஒரே நேரத்தில் 14 லட்சம் பேர் தேவஸ்தான இணையதளத்தில் முயற்சி செய்தனர்.