வீடு, ஓட்டல்களில் கிறிஸ்துமஸ் குடில்கள் அமைப்பு

ஊட்டி: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி பல்வேறு குடியிருப்புகள் மற்றும் ஓட்டல்களில் கிறிஸ்துமஸ் குடில்கள் அமைத்து வருகின்றனர்.

நீலகிரி  மாவட்டத்திற்கு நாள்தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.  குறிப்பாக, தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை விடுமுறையின் போது ஏராளமான  சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இது போன்ற சமயங்களில் சுற்றுலா பயணிகளை  வரவேற்கும் வகையில் அல்லது மகிழ்விக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள்  நடத்தப்படுகிறது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்துச் செல்கின்றனர்.

இந்நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஊட்டியில் உள்ள பல்வேறு  ஓட்டல்கள் மற்றும் தனியார் விடுதிகளிலும் தற்போது கிறிஸ்துமஸ் குடில்கள்  அமைக்கப்பட்டு வருகிறது.

அதேபோல் பலரது வீடுகளிலும் கிறிஸ்துமஸ்  குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குடில்களில் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை  வரலாறு சித்திரிக்கும் வகையில், பல்வேறு சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. பாரம்பரியம் மாறாமல் சாம்பிராணி மரங்கள், பச்சை பாசிகள் மற்றும் தெர்மோ  கோல் ஆகியவைகளை கொண்டு இந்த குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மின் விளக்குகளும் ஒளிர்கின்றன.அழகான இந்த குடில்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதுடன் அதன்  அருகே நின்று செல்பியும்  எடுத்துச் செல்கின்றனர்.

Related Stories: