புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை அலுவலகத்திற்கு வரும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றிதழ் வைத்திருந்தாள் மட்டுமே அனுமதிக்கபடுகிறார்கள். புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலத்திலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் தடுப்பூசி செலுத்திய சான்றிதழை வைத்திருக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்காக வீடு, வீடாக சென்று தடுப்பூசி போடாதவர்கள் கணக்கெடுக்கப்பட்டு அவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு முகாம்கள் நடந்து வருகிறது. தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான ஆவணம் எல்லா இடங்களிலும் கட்டாயம் கேட்கப்படும் என சுகாதாரத்துறை ஏற்கனவே அறிவித்துள்ளது.