கொடைக்கானல்: மலைகளின் இளவரசி கொடைக்கானலில் கடந்த வாரங்களில் தொடர்மழை பெய்ததால் சுற்றுலாப் பயணிகளின் வருகை இல்லாமல் இருந்தது. மழை குறைந்ததை அடுத்து சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்க தொடங்கியுள்ளது. வார விடுமுறை தினமான நேற்று பயணிகள் அதிக அளவில் குவிந்தனர். கொடைக்கானலில் உள்ள அனைத்து இடங்களிலும் சுற்றுலாப் பயணிகள் நிறைந்து இருந்தனர். தற்போது குளிர் சீசன் துவங்கியுள்ளது. கடும்குளிர் நிலவும் இந்த சீசனை அனுபவிப்பதற்கென்றே வெளிநாடுகள், வடமாநிலங்களில் இருந்து ஏராளமானோர் வருவது வழக்கம்.