சென்னை-சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் தவறான வழிகாட்டி பலகையால் வாகன ஓட்டிகள் குழப்பம்

திருவலம்: தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் அனைத்து மாநிலங்கள் மற்றும் ஊர்களுக்கு செல்லும் வழிகாட்டி பலகைகள் தமிழ்நாடு நெடுஞ்சாலைதுறையினர் சார்பில் வைக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் வேலூர் மாவட்டம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட எல்லை பகுதியான திருவலம் அடுத்த சீக்கராஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட சீக்கராஜபுரம் கூட்ரோடு பகுதியில் சென்னை-சித்தூர் தேசிய நெடுஞ்சாலையோரம் தமிழ்நாடு நெடுஞ்சாலைதுறை சார்பில் வைக்கப்பட்டுள்ள ஊர்களின் வழிகாட்டி பலகையில் வாலாஜா மற்றும் சென்னைக்கு நேராக செல்ல வேண்டிய வழிகாட்டுதலுக்கு பதிலாக இடதுபுறமாக அம்புகுறி காட்டி தவறான திசையிலும்,

எதிர் திசையில் வேலூர் மற்றும் சித்தூர் செல்லும் சாலை வழிகாட்டியினை வலதுபுறம் அம்புகுறி காட்டி தவறுதலாக வைத்துள்ளதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பல்வேறு குழப்பங்களுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே சம்மந்தப்பட்ட தமிழ்நாடு நெடுஞ்சாலைதுறையினர் உரிய நடவடிக்கை எடுத்து சரியான வழிகாட்டுதல் பலகைகளை அமைக்க வேண்டும் என பொதுமக்கள்கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: