சென்னை: துபாயிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நேற்று சென்னை வந்தது. அதில் சென்னையை சேர்ந்த 4 ஆண் பயணிகள் ஒரு குழுவாக வந்திருந்தனர். சுங்கத்துறை சோதனையில் அவர்களுடைய சூட்கேஸ்களில் ரூ.42.04 லட்சம் மதிப்புள்ள 1.147 கிலோ தங்கம் மற்றும் ரூ.49.5 லட்சம் மதிப்புள்ள மின்னணு பொருட்களை கடத்தி வந்தது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்து, 4 பயணிகளையும் கைது செய்தனர்.