சூலூர்: சூலூர் அருகே புறம்போக்கு இடத்தில் கட்டிய 3 கோயில்களை வருவாய்த்துறையினர் போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அகற்றினர். கோவை மாவட்டம் சூலூர் அடுத்த பட்டணம் அருகே உள்ள ராமன்குட்டை பகுதியில் வாசுதேவன் கோயில் உள்ளது. நூற்றாண்டு பழமையான இந்த கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இதன் எதிரில் இருந்த குட்டை புறம்போக்கு இடத்தில் மண்ணைக் கொட்டி மேலும் 7 கோயில்கள் கட்டப்பட்டன.இதை எதிர்த்து குட்டையின் அருகிலிருந்த விவசாயிகள் தங்கள் பூமிகளுக்கு செல்லும் வழித்தடத்தை மறித்து அனுமதியின்றி கோயில் கட்டி உள்ளதாகவும், அதை இடித்து வழித்தடம் அமைத்துத் தர வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.