பூடான் நாட்டின் 114-வது தேசிய நாள்: அந்நாட்டின் உயரிய விருதான நகடக் பெல் ஜி கோர்லோ விருது பிரதமர் மோடிக்கு அறிவிப்பு

பூடான்: பூடான் நாட்டின் தேசிய தினமான இன்று பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதான நகடக் பெல் ஜி கோர்லோ வழங்கப்பட உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. பூடானின் தேசிய தினத்தை முன்னிட்டு தனது நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் லோடே ஷேரிங் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். பூடான் நாட்டின் 114-வது தேசிய நாளான இன்று பல்வேறு துறைகளில் உள்ளவர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில், இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடிக்கு,பூடான் அரசு அந்நாட்டின் மிக உயரிய விருதான் “நகடக் பெல் ஜி கோர்லோ” விருதை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. பிரதமர் மோடி விருதுக்கு மிகவும் தகுதியானவர்.

பூடான் மக்களிடமிருந்து வாழ்த்துக்கள். அனைத்து தொடர்புகளிலும் உன்னதமான, ஆன்மிக மனிதனாக மோடி பார்க்கப்படுகிறார். கவுரவத்தை நேரில் கொண்டாட ஆவலுடன் காத்திருக்கிறோம். மிக உயரிய சிவிலியன் விருதான நகடக் பெல் ஜி கோர்லோவுக்கு, நரேந்திர மோடியின் பெயரை உச்சரிக்கும்போது மகிழ்ச்சி அடைந்தேன். பல ஆண்டுகளாக, குறிப்பாக  கொரோனா தொற்றுகளின்போதும் மோடியின் நிபந்தனையற்ற நட்பும், ஆதரவும் நீடிக்கிறது.

Related Stories: