ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திலிருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ள தனுஷ்கோடி பகுதி கடந்த 1964 ஆம் ஆண்டு டிசம்.23 ஆம் தேதி ஏற்பட்ட புயலால் கடலில் மூழ்கியது. எஞ்சிய பகுதிகள் தற்போது சுற்றுலா தலமாக உள்ளது. புயல் பாதிப்பால் ரயில் பாதை சேதமடைந்து கடலில் மூழ்கியதால் ரயில் சேவையும் முற்றிலும் நிறுத்தப்பட்டது. 56 ஆண்டுகளுக்குப் பிறகு ராமேஸ்வரம் - தனுஷ்கோடி இடையே மீண்டும் ரயில் சேவை தொடங்க ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது.