சென்னை: தென்கிழக்கு வங்கக் கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று உருவாகலாம் என கணிக்கப்பட்ட நிலையில், காலதாமதமாக உருவாகிறது. வட கிழக்கு பருவ காற்றின் காரணமாக டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று ராமநாதபுரம், புதுக்கோட்டை ,டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்தது. அதே போல இன்றும் இந்த இடங்களில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் நாளை மற்றும் நாளை மறுநாள் தென்மாவட்டங்களில் கடலோரப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் . வருகிற 20-ம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.