திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் அருகில் உள்ள வலையங்குளம் பகுதியில் தினந்தோறும் அச்சத்துடன் மாணவ-மாணவிகள் நான்குவழி சாலையை கடந்து பள்ளிக்கு சென்று வருகின்றனர். மதுரை திருப்பரங்குன்றம் அருகில் உள்ளது வலையங்குளம். இப்பகுதியில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு அரசு உயர்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் இப்பகுதியை சேர்ந்த சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு மாணவர்கள் தூத்துக்குடி தேசிய நான்கு வழிச்சாலையை கடந்து சென்று வருகின்றனர். நான்குவழி சாலையில் அதிவேகத்தில் செல்லும் வாகனங்களால் மாணவர்கள் ஒருவித அச்சத்துடனே சாலையை கடந்து செல்கின்றனர்.