சென்னை: வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய பரப்பளவை குறைக்கும் முடிவு திரும்பப் பெறப்படுவதாக தமிழ்நாடு அரசின் வனத்துறை தெரிவித்துள்ளது. அதிமுக ஆட்சியின் போது வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதியை 5 கிலோ மீட்டர் சுற்றளவில் இருந்து 3 கிலோ மீட்டர் சுற்றளவாக குறைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக தேசிய வன உயிர் வாரியத்திடம் அதிமுக அரசு விண்ணப்பம் ஒன்றையும் அளித்தது. இதனால் பாதுகாக்கப்பட்ட பகுதியை கட்டுமானம் உள்ளிட்ட திட்டங்களுக்கு திறந்துவிடும் ஆபத்து ஏற்பட்டது. தனியார் நிறுவனங்களின் லாபத்திற்காக அதிமுக அரசு இத்தகைய நடவடிக்கை மேற்கொண்டதாக கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து பரப்பளவு குறைப்பு தொடர்பான தகவல் உண்மையில்லை என்று வனத்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.