டெல்லி :ராஜஸ்தானில் மேலும் 4 பேருக்கும் மராட்டியத்தில் மேலும் 2 பேருக்கும் ஓமிக்ரான் தொற்று உறுதியாகி இருப்பதால் இந்தியாவில் ஓமிக்ரான் பாதிப்பு 44 ஆக அதிகரித்துள்ளது. தென் ஆப்ரிக்காவில் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்ட ஓமிக்ரான் வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி இருக்கிறது. வெகுவும் வேகமாக பரவும் தன்மை கொண்ட ஓமிக்ரான் வைரஸை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மராட்டியத்தில் நேற்று 2 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதியாகி உள்ளது. லத்தூரில் ஒருவருக்கும் புனேவில் ஒருவருக்கும் ஓமிக்ரான் தொற்று உறுதியாகி உள்ளது.