கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு பகுதியில் காட்டுப்பன்றிகள் நடமாட்டம் அதிகரிப்பால் வாழை சாகுபடி வெகுவாக பாதித்துள்ளது. இதனால் விவசாயிகள்கள் வேதனையடைந்துள்ளனர்.காட்டுப்பன்றிகளை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். கோதவாடி குளத்திலுள்ள புதர்களிலும், குளத்திற்கு வரும் நீர் வழிப்பாதைகளிலும் கடந்த சில வருடங்களாக காட்டுப்பன்றிகள் சுற்றி வருகிறது. தற்போது நீர்வழிப்பாதைகளில் தண்ணீர் வந்து குளத்திற்கு செல்வதால் காட்டுப்பன்றிகள் அருகில் உள்ள கிராமங்களில் முகாமிட்டு வாழைக்கன்றுகளை இரவு நேரங்களில் உணவாக உட்கொண்டு வருகின்றது.