தேவகோட்டை : பள்ளி எதிரில் செப்டிக் டேங் கழிவுகளை கொட்டி சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேவகோட்டை அரசு மருத்துவமனை குடியிருப்பு எதிராக 16வது தொகுதி நகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. அதன் நேர் எதிரில் நான்கு வார்டுகளில் வீடுகளில் சேகரிக்கும் குப்பைகளை குவித்து பின்னர் அள்ளிச்செல்வது வழக்கம். நேற்று நள்ளிரவு தனியார் செப்டிக் டேங்க் வைத்திருப்பவர்கள் கழிவுகளை அந்த இடத்திலேயே கொட்டிச்சென்றனர்.