சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே கீழத்தூவல் காவல் நிலைய போலீசார் கடந்த 4ம் தேதி வாகன சோதனையில் நீர்க்கோழினேந்தல் கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் மணிகண்டன் மற்றும் அவரது நண்பர் சஞ்சயை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். மாலையில் வீட்டிற்கு அனுப்பப்பட்ட மணிகண்டன் இரவில் தூங்கிய நிலையில் மர்மமான முறையில் இறந்ததாக செய்திகள் வந்துள்ளன.இதேபோன்று, விழுப்புரம் மாவட்டம் சு.பில்ராம்பட்டு கிராமத்தை சேர்ந்த உலகநாதன் என்கிற விவசாயி, அவரது மனைவியை நேற்று முன்தினம் டாஸ்மாக் கடை அருகே சுண்டல், போண்டா விற்றபோது, அரகண்டநல்லூர் காவல் துறையினர் தடுத்துள்ளனர். அப்போது, உலகநாதன் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.