திருவொற்றியூர்: புழல் சின்னசாமி தெருவை சேர்ந்தவர் சிவா. ஆட்டோ டிரைவரான இவர், நேற்று முன்தினம் மாலை மாதவரம் மேம்பாலம் அருகே சவாரிக்காக காத்திருந்தார். அப்போது அங்கு சுற்றித் திரிந்த ஒரு சிறுமியை அழைத்து சிவா விசாரித்துள்ளார். அதற்கு அந்த சிறுமி, ‘ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நான், 9ம் வகுப்பு படித்து வருகிறேன். பெற்றோர் திட்டியதால் கோபித்துக்கொண்டு ஆந்திராவில் இருந்து பஸ் ஏறி இங்கு வந்துவிட்டேன். எங்கு போவது என்று தெரியாமல் இருக்கிறேன்’ என்று கூறி அழுதுள்ளார்.